சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
173   பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 81 - வாரியார் # 114 )  

பகர்தற்கு அரிதான

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
     தனனத்தன தான தந்தன ...... தனதான

பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
     பயிலப்பல காவி யங்களை ......யுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
     பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
     சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
     தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
     நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
     நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
     அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
     அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.
Easy Version:
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில்
சில பாடல் அன்பொடு பயில
பல காவியங்களை உணராதே
பவளத்தினை வீழியின்கனி யதனைப்பொரு
வாய் மடந்தையர் பசலைத்தனமே பெறும் விரகாலே
சகரக்கடல் சூழும் அம்புவி மிசை
இப்படியே திரிந்து
உழல் சருகொத்து உளமே அயர்ந்து
உடல் மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண என
உற்றெழு தோகை யம்பரிதனில்
அற்புத மாக வந்தருள் புரிவாயே
நுகர்வித்தகமாகும் என்று
உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பாலன்
என்றிடும் இளையோனே
நுதிவைத்த கரா மலைந்திடு
களிறுக்கு அருளே புரிந்திட
நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே
அகரப்பொருள் ஆதி யொன்றிடு
முதல் அக்கரமானதின் பொருள்
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா
அமரர்க்கு இறையே வணங்கிய
பழநித் திருவாவினன்குடி அதனில்
குடியாய் இருந்தருள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் ... இத்தன்மைத்து என்று
சொல்ல அரியதான செந்தமிழ் இசையில்
சில பாடல் அன்பொடு பயில ... சில பாடல்களை மெய்யன்போடு
கற்றுக்கொள்ள
பல காவியங்களை உணராதே ... பற்பல தமிழ்க் காவியங்களைத்
தெரிந்து கொள்ளாமல்,
பவளத்தினை வீழியின்கனி யதனைப்பொரு ... பவளத்தையும்
வீழிப்பழத்தையும் போன்று
வாய் மடந்தையர் பசலைத்தனமே பெறும் விரகாலே ... சிவந்த
வாயை உடைய பெண்களின் (காமநோயால் ஏற்படும்) நிறமாற்றம்
உண்டாக்கும் விரக வேதனையால்,
சகரக்கடல் சூழும் அம்புவி மிசை ... சகர மைந்தர்களால்
தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமியிலே
இப்படியே திரிந்து ... இவ்வண்ணமாகவே மோகவசப்பட்டு
அலைந்து திரிந்து,
உழல் சருகொத்து உளமே அயர்ந்து ... சுழற்காற்றில் அகப்பட்ட
சருகுபோல் மனம் மிகவும் சோர்ந்து,
உடல் மெலியாமுன் ... எனது உடல் மெலிந்து அழிவதற்கு
முன்னாலே,
தகதித்திமி தாகி ணங்கிண என ... 'தகதித்திமி தாகி ணங்கிண'
என்ற தாளத்திற்கு ஏற்ப
உற்றெழு தோகை யம்பரிதனில் ... நடனமிட்டு எழுகின்ற
தோகையுடைய அழகிய குதிரை போன்ற மயில்மீது
அற்புத மாக வந்தருள் புரிவாயே ... அற்புதமாக வந்து திருவருள்
புரிவாயாக.
நுகர்வித்தகமாகும் என்று ... இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான்
பேறறிவு தரும் என்று
உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு ... உமாதேவி சொல்லி
அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய
நுவல்மெய்ப்புள பாலன் ... வேதங்களெல்லாம் போற்றுகின்ற
புகழையுடைய திருக்குமாரன்
என்றிடும் இளையோனே ... இவன்தான் என ஏத்தும் இளைய
குமாரனே,
நுதிவைத்த கரா மலைந்திடு ... நுனிப்பல் கூர்மையான முதலை
வலியப் போராடிய
களிறுக்கு அருளே புரிந்திட ... கஜேந்திரன் என்ற யானைக்குத்
திருவருள் செய்து காத்திட
நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே ... ஒரு நொடியில்
கருணையோடு வந்த திருமாலின் மருமகனே,
அகரப்பொருள் ஆதி யொன்றிடு ... அகரம், உகரம், மகரம் ஆகிய
எழுத்துக்கள் அடங்கியதும்,
முதல் அக்கரமானதின் பொருள் ... எல்லா மந்திரங்களுக்கும்
முதல் அக்ஷரமாக இருப்பதுமான ஓம் என்னும் பிரணவ
மந்திரத்தின் தத்துவத்தை
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா ... சிவபெருமானுக்கு
இனிமையாக உபதேசித்த குருநாதனே,
அமரர்க்கு இறையே வணங்கிய ... தேவர்களுக்குத் தலைவனாகிய
இந்திரன் வழிபட்டுப் போற்றிய
பழநித் திருவாவினன்குடி அதனில் ... பழநி மலைக்கடியில் உள்ள
திருவாவினன்குடித் தலத்தில்
குடியாய் இருந்தருள் பெருமாளே. ... நீங்காது வாசம் செய்து
அடியார்களுக்கு அருளும் பெருமாளே.

Similar songs:

173 - பகர்தற்கு அரிதான (பழநி)

தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
     தனனத்தன தான தந்தன ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song